ஞாயிறு, 29 மே, 2011

ஒரு லங்காவி அனுபவம் !

சின்ன வயசிலேயிருந்தே ஆவி , பூதம் எதிலும் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை,ஆனால் கடவுள் நம்பிக்கை உண்டு.இருந்தாலும் கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது. நாங்கள் எங்கள் குடும்பமாக [ மொத்தம்24பேர்] லங்காவி சென்றிருந்தோம். அது ஒரு ஷெல்லெட் வகையை சேர்ந்த வீடு. ஒரு ஹால், இரண்டு அறைகளைக் கொண்ட வீடு அது.ஒரு அறைக்கும் அடுத்த அறைக்கும் இடையில் ஒரு நுழைவு வாசல் இருந்தது. அதாவது இந்த அறையிலிருந்து அடுத்த அறைக்கு போக முடியும். அடுத்த அறையில்தான்கழிவறை அமைந்திருந்தது. இரவு நீண்ட நேரம் பேசி கொண்டிருந்து விட்டு நள்ளிரவுக்குப் பிறகுதான் தூங்க தொடங்கினோம். நான் பொதுவாகவே எவ்வளவு தாமதமாகத் தூங்கினாலும் காலையில் காலையில் தன்னிச்சையாக ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன்.அன்றும் அதேபோல் தூக்கம் போய் விட்டது. இருந்தாலும் உடல் சோர்வாக இருந்ததாலும் மணி என்னவென்று தெரியாததாலும் படுத்தே இருந்தேன்
என் கைக் கடிகாரம் எதிரிலிருந்த மேஜையின் மீது வைத்து விட்டு படுத்துவிட்டதினால், அதை எடுத்துப் பார்க்க சோம்பல் பட்டுக் கொண்டுயாராவது எழுந்தால் கேட்டுகொள்ளலாம் என்று விழித்துக் கொண்டுதான் படுத்திருந்தேன்.
என் இரட்டைக் கட்டிலில் என்னுடன் என் தங்கை படுத்திருந்தார். பக்கத்தில் இதேபோன்ற கட்டிலில் என் அக்காவின் மகள்,அவரின் இரண்டு பிள்ளகளுடன் படுத்திருந்தவர் [ அவர் எழுந்ததை நான் பார்க்க இயலாத அளவில்தான் எங்கள் படுக்கை அமைப்பு இருந்தது]
எங்கள் அறையிலிருந்து அடுத்த அறைக்குப் போவதைப் பார்த்தேன். ஒரு வெள்ளை நிற நைட்டீ யில் [ அந்த நைட்டீயில் அவரை அவரின் திருமணத்துக்கு முன்பு பார்த்திருக்கிரேன்.] அப்பொழுதும் நான் யோசித்தேன் ஏறக்குறைய பத்து வருடத்துக்கு முந்திய நைட்டீயை இப்பொழுதும் போட்டுக் கொண்டிருக்கிறாரேஎன்று.] கடந்து போவதை பார்த்தேன்.போனவர் திரும்பி வருவார், அவர் படுப்பதற்குள் மணி என்னவென்று அவரைப் பார்க்க சொல்ல வேண்டும் என்பதற்காக, வைத்த கண் வாங்காமல் அந்த வாசலையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் போனவர் ஏறக்குறைய பத்து நிமிடத்துக்கு மேலாகியும் திரும்பவில்லை.
ஏன் , என்ன காரணம் என்று அறிவதற்காக நானும் படுக்கையை விட்டு எழுந்தேன், அதிர்ச்சியுடன் மீண்டும் படுக்கையிலேயே பொத்தென்று அமர்ந்து விட்டேன், ஏனென்றால் என் பக்கத்துப் படுக்கையில் பச்சைக் கலர் நைட்டீயில் தன் இரண்டு பிள்ளைகளுக்கு இடையில் என் அக்காமகள் படுத்திருப்பதைப் பார்த்தேன். ஓடிச் சென்று அடுத்த அறையில் வேறுயாரும் வெள்ளை நைட்டீயில் படுத்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்த எனக்கு ஏமாற்றம்தான்.
அக்கா மகளை எழுப்பி இந்த விஷயத்தை சொன்னேன் ‘ எப்படி சித்தி அவ்வளவு பழைய நைட்டீ இன்னும் இருக்கும் ,அது எப்பவோ தூக்கி வீசியாகி விட்டதே’ என்றார். இதில் பாராட்டு வேறு,இன்னும் அந்தப் பழைய நைட்டீயை நினைவு வச்சிருகீங்களே என்று.அதோடு அந்த விடிகாலையிலேயே எல்லோரும் எழுந்து விட்டார்கள். விடிந்த பிறகு அங்குள்ள வேலையாட்களை விசாரிக்கும் போதுதான் தெரிந்தது, அங்கு ஏற்கெனெவே’…………..’ நடமாட்டம் உண்டு என்று. பேயாவது பிசாசாவது அதெல்லாம் சுத்த பிரமை என்று இப்பொழுதெல்லாம் நான் சொல்லுவதே கிடையாது

புதன், 30 செப்டம்பர், 2009

நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம், ஏழரை சனி இருப்பவர்கள்


ஆஞ்சநேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும் அதே போல் பலவித

மான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போதுஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக

தீரும் அவருக்கு செய்பவகைகளில் சில,

வடைமாலை சாத்துதல்

செந்தூரக்காப்பு அணிவித்தல்

வெண்ணெய் காப்பு சாத்துதல்

ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்

இந்த பரிகாரங்களை நான் பலருக்கு சொல்லி நன்மை நடந்ததை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்

வடைமாலை,,,,,அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும்

இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.

வெற்றிலைமாலை ,,,,,,,சீதையைத் தேடிதேடி பல இடங்களில் காணாது பின் அசோகவனத்தில்

அவரை சந்த்தித்தார், அப்போது சீதை அவருக்கு வெற்றிலைக் கொடி அணிவித்து அவரை வாழ்த்தினார். என்றும் சிரஞ்ஜீவியாய் இருக்கவும் வாழ்த்தினாள் வெற்றிலை வயிறு சம்பந்தமான

எல்லா தோஷங்களையும் போக்கும் பண்டைக் காலத்தில் சின்ன குழந்தைக்கும் வெற்றிலை சுரசம்

வாயு தொல்லை இல்லாமல் இருக்க கொடுப்பார்கள்

வெண்ணெய் சாத்துதல்,,,,,,,ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு

தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,

சிந்தூரக் காப்பு ,,,,,,சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை கேட்கிறாள். "என் அவர் நலமா?"

என்று அதற்கு அனுமான் "எப்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றதும்

மகிழ்ச்சி தாங்காமல் சீதை தரையிலிருந்து செம்மண்ணை நெற்றியில் வைத்துக் கொண்டாள்., இதைப் பார்த்த அனுமனுக்கு மிக மிக சந்தோஷம் தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும்

செம்மண் பூசிக் கொண்டாராம்

ராம் எழுதி மாலையாக அணிவித்தல் அனுமன் தன் இதயத்திலேயே ராமாவை வைத்திருக்கிறார்.

சில படங்களில் அவர் தன் இதயத்தையே கிழித்து ராமாவைக் காட்டுவது போல் நாம் பார்த்திருக்கிறோம்

ராமர் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்குவார். ராம நாமத்திற்கு அவ்வளவு மகிமை

வாலில் பொட்டு வைப்பது ,,,,,,அனுமனுக்கு சக்தி முழுவதும் தன் வாலில் தான். இராவணன் முன் தன் வாலையே

சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவண்னுக்கும் மேல் உயரமாக அமர்ந்தவர் அவர் இலங்கையை எரித்ததும்

வாலில் வைத்த நெருப்பினால்தான் அவருக்கு சூடு தெரியாமல் ஆனால் இலங்கையே எரிந்தது

ஆகையால் வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம்

சித்தியாகிறது என்ற நம்பிக்கை …நம்புகிறவர்களுக்கு பலிக்கிறது

ஆவணி மூலத்தன்று அனுமானை வழிபட்டு ஆசி பெறுவோமாக

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

உலக நியதி




எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது...

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது...

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்...

உன்னுடைய எதை நீ இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்???

எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு???

எதை நீ படைத்திருக்கிறாய், அது வீணாகுவதற்கு???

எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்து எடுக்கப்பட்டது...

எதைக் கொடுத்தாயோ, அது இங்கிருந்து கொடுக்கப்பட்டது...

எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையாகிறது...

மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்...

இந்த மாற்றம் உலக நியதியாகும்.....

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

அம்மா